திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2025 05:03
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இன்று காலை 11:30 மணிக்கு பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் மகாபைரவ பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் விபூதிக் காப்பு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த யோகபைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.