சிங்கம்புணரி மகாமுத்து முத்துவராகி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2025 10:03
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் மகாமுத்து வராகி அம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நடந்தது. இக்கோயில் கும்பாபிஷேகம் பிப். 4 ல் நடந்தது. தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடந்தது. நேற்று மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டது. மகாமுத்து வராகி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ மகா முத்து வராகி அம்மன் திருக்கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.