பதிவு செய்த நாள்
24
மார்
2025
12:03
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா வருகிற 29ம் தேதி காப்பு கட்டுடன் துவங்க உள்ள நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.விழாவின் போது தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி சென்று வருகின்றனர். இந்த வருடத்திற்கான பங்குனி திருவிழா வருகிற 29ம் தேதி இரவு 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா வருகிற ஏப்,5ம் தேதி நடைபெற உள்ளது.மறுநாள் இரவு 7:20 மணிக்கு மேல் மின் அலங்கார தேர்ப்பவனியும், 7ம் தேதி பால்குடம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். பங்குனி மாதம் பிறந்ததிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாயமங்கலத்தில் குவிந்தனர். இதனால் கோயிலில் நீண்ட வரிசைகளில் நின்று பக்தர்கள் அம்மனை வேண்டி சென்றனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டிகள், ஆயிரம்கண் பானை, கரும்பாலை தொட்டில், உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களையும் செலுத்தி ஆடு கோழிகளை களை பலியிட்டனர்.