Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெள்ளரை புண்டரீகாசப் பெருமாள் ... பங்குனி இரண்டாவது சோமவாரம்; வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் பங்குனி இரண்டாவது சோமவாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

24 மார்
2025
12:03

இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா வருகிற 29ம் தேதி காப்பு கட்டுடன் துவங்க உள்ள நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.


தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.விழாவின் போது தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி சென்று வருகின்றனர். இந்த வருடத்திற்கான பங்குனி திருவிழா வருகிற 29ம் தேதி இரவு 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா வருகிற ஏப்,5ம் தேதி நடைபெற உள்ளது.மறுநாள் இரவு 7:20 மணிக்கு மேல் மின் அலங்கார தேர்ப்பவனியும், 7ம் தேதி பால்குடம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். பங்குனி மாதம் பிறந்ததிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாயமங்கலத்தில் குவிந்தனர். இதனால் கோயிலில் நீண்ட வரிசைகளில் நின்று பக்தர்கள் அம்மனை வேண்டி சென்றனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டிகள், ஆயிரம்கண் பானை, கரும்பாலை தொட்டில், உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களையும் செலுத்தி ஆடு கோழிகளை களை பலியிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; சனி பகவான் சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்களை எடுத்துக் கொள்கிறார். அதாவது ஒவ்வொரு ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே 800 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
காரமடை; வைணவ தளங்களில் பிரசித்தி பெற்ற காரமடைஅரங்கநாத ஸ்வாமி கோவிலில் குரோதி வருட மாசி மக பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
தேனி; சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, சித்திரை மாத பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar