Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி மலைக்கு 54வது ஆண்டாக ... திருமலையில் அன்னமாச்சார்யா 522 வது பிறந்த நாள் உற்சவம் கோலாகலம் திருமலையில் அன்னமாச்சார்யா 522 வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

27 மார்
2025
10:03

இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்காக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருகிற 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாவான பொங்கல் விழா ஏப்.5ம் தேதியும், மின் அலங்கார தேர்பவனி 6ம் தேதியும், 7ம் தேதி பால்குடம், ஊஞ்சல் உற்சவம், பூப்பல்லாக்கும், 8ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பங்குனி பொங்கல் விழா நடைபெறும் நாட்களின் போது ஏராளமான பக்தர்கள் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் நீராடிய பிறகு தீச்சட்டி,ஆயிரங்கண் பானை, கரும்பாலைத் தொட்டில்,அங்கப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபடுவர். இதற்காக தற்போது தெப்பக்குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததை தொடர்ந்து பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் தலைமையில் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தி புதிதாக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் கூறியதாவது, பக்தர்களின் வசதிக்காக தெப்பக்குளத்தில் தேங்கியிருந்த பழைய தண்ணீர் மற்றும் குப்பைகளை அகற்றிவிட்டு தற்போது புதிதாக குழாய்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.மேலும் குடிதண்ணீர்,கழிப்பறை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே மகா கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காரமடை அருகே பெள்ளாதி ஊராட்சி, ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: புலிக்குடிவனம் கிராமத்தில் கங்கையம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் நேற்று, மஹா ... மேலும்
 
temple news
தேனி: தேனி ஒன்றியம், ஸ்ரீரெங்கபுரம் கம்மவார் நாயுடு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில் புவனேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவில் முதல் தளத்தில் இரண்டாவது பிராண பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar