பதிவு செய்த நாள்
27
மார்
2025
06:03
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர், பெரியக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, மஹா நந்தியம் பெருமானுக்கு, மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, மஹா நந்தியம் பெருமானுக்கு, திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள்,தேன்,பால், தயிர், பழவகைகள், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம் என்பதால், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.