பதிவு செய்த நாள்
28
மார்
2025
10:03
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் நேற்று நடந்த பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, கிளி கோபுரம் அருகிலுள்ள அதிகார நந்தி, தங்க கொடிமரம் அருகிலுள்ள சிறிய நந்தி, ஆகியவற்றிற்கு, பால், பன்னீர், அபிஷேக பொடி, விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என, பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.