திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2025 11:03
திருத்தணி; திருத்தணி காந்தி நகரில் திரவுபதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்தில் தீமிதி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. நடப்பாண்டிற்கான தீமிதி விழா நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு உத்சவர் அம்மன் வீதியுலா நடந்தது. வரும் ஏப்.1 ம் தேதி பகாசூரன் வதம், 2ம் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், 4ம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 7ம் தேதி அர்ஜுனன் தபசு, 13ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீ மிதிவிழா, உத்சவர் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 14ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.