Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் சிவாலயங்களில் பிரதோஷ ... காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
68 ஆண்டுகளுக்கு பின் காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் 3 கருட சேவை
எழுத்தின் அளவு:
68 ஆண்டுகளுக்கு பின் காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் 3 கருட சேவை

பதிவு செய்த நாள்

28 மார்
2025
12:03

துாத்துக்குடி; நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் 68 ஆண்டுகளுக்குப் பின் மூன்று கருட வாகனங்களில் எழுந்தருளிய கருட சேவை நடந்தது.


துாத்துக்குடி மாவட்டத்தில் தாமிபரணி ஆற்றங்கரையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சுற்றி அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் 3 வது ஸ்தலமான திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவில் விளங்குகிறது. இங்கு பங்குனி உற்சவ திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி காய்சினிவேந்த பெருமாள் காலையில் பல்லக்கில் வீதி புறப்பாடும், இரவில் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.


ஐந்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு காலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்தியல் கோஷ்டி, பின்னர் திருமஞ்சனம் நடந்தது. கருட சேவையை முன்னிட்டு இரவு ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளப்பிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தர் ஆகிய மூன்று பெருமாள்களும் திருப்புளியங்குடி கோவில் வளாகத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். தீபாராதனைக்கு பின்னர் மூன்று கருட வாகனங்களில் மூன்று பெருமாள்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் கடந்த 1957ம் ஆண்டு வரை ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் ஆகிய மூன்று சுவாமிகளும் கருட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்துள்ளது. பின்னர், கடந்த ஆண்டு வரை நடந்த பங்குனி திருவிழாக்களில் திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கருட சேவை மட்டுமே நடந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 68 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தற்போது ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் ஆகிய சுவாமிகள் கருட வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜருக்கு, வெளிநாட்டு பக்தர், ரூ. 25லட்சம் மதிப்புள்ள நவரத்தின ஆபரணம் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar