Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் ... நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் மண்டல பூஜை நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

பதிவு செய்த நாள்

31 மார்
2025
03:03

மயிலாடுதுறை; திருமெய்ஞாசனம் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தீர்த்த வாரி நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாள் நல்லூர் ஊராட்சியில் உள்ள திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து புனித நீரை எடுத்து வந்து தினமும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இந்த நாளில் கோவில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவது சிறப்பு. மேலும் இந்த நீர் காசிக்கு இணையான புனித நீராக கருதப்படுகிறது. ஆண்டில் பங்குனி அசுவதி நட்சத்திரத்தன்று மட்டும் பக்தர்கள் இந்த கோவில் கிணற்றில் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பங்குனி அசுபதி நட்சத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு முதலில் கோவில் குளத்தில் புனித நீராடினார் பின்னர் புனித கிணற்றில் நீராடினார். இதையொட்டி அம்மல குஜ நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகா திபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கிணற்றில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கணேஷ் குருக்கள் கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar