Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வஞ்சிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் ... மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.14 கோடியில் திருப்பணிகள் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழா; முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழா; முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

31 மார்
2025
05:03

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் வருகிற ஏப்., 4ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று காலை 9:20 மணி முதல் யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. மங்களநாதர் சுவாமி வலது சன்னதி பிரகாரத்தில் அனுக்கை பூஜையுடன் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் துவங்கியது. உற்ஸவ மூர்த்திகளாக விநாயகர், மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் வடிவமைக்கப்பட்டிருந்தனர்.


200க்கும் மேற்பட்ட குருக்கள், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்டனர். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் வேதகாம வித்யாலயம் முதல்வர் பிச்சை குருக்கள், தூத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவகாமி வித்யாலய முதல்வர் கல்யாண சுந்தர சிவாச்சாரியார், கோவை அரண் பணி அறக்கட்டளை தலைவர் தியாகராஜன், சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாளை சாந்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம் உள்ளிட்டவைகளும் பரிவார மூர்த்திகளின் கலசம் பிரதிஷ்டை உள்ளிட்டவைகள் நடக்கிறது. சிறப்பு தீபாராதனை, பூர்ணாகுதி உள்ளிட்டவைகளுக்கு பிறகு பிரசாதம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் உத்தரகோசமங்கைக்கு வரத்துவங்கியுள்ளனர். உத்தரகோசமங்கை பகுதி மின்னொளி விளக்குகளால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ... மேலும்
 
temple news
சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar