தொடர் விடுமுறை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2025 05:03
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள் கிழமை ரம்ஜான் அரசு விடுமுறை என்பதால், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொளுத்தும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.