பதிவு செய்த நாள்
11
ஏப்
2025
01:04
கரூர்; கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா திருவிழா ஆண்டுதோறும் விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா சிறப்பாக துவங்கி, நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலாவும், கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, கணபதி, பாலமுருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு மட வீதிகளிலும் சுற்றி வந்தது. அப்போது ஒவ்வொரு வீதிகளிலும் கூடி நின்ற பக்தர்கள் தேரின் முன்பு நின்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக அன்னதானமும் நடைபெற்றது.