பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
11:04
அவிநாசி: சேவூரில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 2002ல் கோவில் வசந்தமண்டபம் பகுதியில் கற்கள் பெயர்ந்தன. முற்றிலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. அறநிலையத்துறையினரால் 2003ல் பாலாலயம் மேற்கொள்ளப்பட்டு, உபயதாரர் நிதி மூலம் திருப்பணிகள் துவங்கின. மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதிகள், சுற்றுச்சுவர், மேல்நிலை நீர் தொட்டி, தீபஸ்தம்பம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டன. நிதி பற்றாக்குறையால் திருப்பணிகள் பாதியில் நின்றன. கோவில் கட்டுமானப் பணிகள் தடையின்றி முழுமை பெற வேண்டி, நாளை காலை 9:00 முதல் 10:00 மணி வரை சுதர்சன ஹோமம் நடக்கிறது. சொர்க்கவாசல், முகப்பு தோரண வாயில் அமைத்து மதில் சுவர், நடைபாதை கல் தளம், மூலவர் விமானம், மகாலட்சுமி விமானம், ஆண்டாள் விமானம், பஞ்சவர்ணம் தீட்டுதல், மகா மண்டபம் முன்பு ஓட்டுக்கரை மண்டபம், புதிய மடப்பள்ளி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இப்பணிகளுக்கு நிதி வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு: 89392 89270 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள செயல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.