விருப்பன் திருநாள்; தங்க சேஷ வாகனத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2025 11:04
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் திருநாள் ஐந்தாம் திருநாள் காலை தங்க சேஷ வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும், 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் “சித்திரைத்தேர் திருவிழா விருப்பன் திருநாள் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் ஐந்தாம் திருநாள் காலை தங்க சேஷ வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஏழாம் திருநாளான 24ம் தேதி மாலை நெல்லளவு கண்டருளுகிறார். விருப்பன் திருநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘சித்திரை திருத்தேர்’ வடம் பிடித்தல் 9ம் திருநாளான வரும் 26ம் தேதி காலை 6.00 மணியளவில் நடைபெறஉள்ளது. 11ம் திருநாளான 28ம் தேதி ஸ்ரீநம்பெருமாள் இரவு 8.00 மணியளவில் ஆளும் பல்லக்கில் புறப்பாடு நடைபெற உள்ளது.