வால்பாறை; வால்பாறை அருகே, சேடல்டேம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாணத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வால்பாறை அடுத்துள்ளது சேடல்டேம். இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில், 45ம் ஆண்டு திருவிழா கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நாள் தோறும் அம்மனுக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. விழாவில் நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, 7:00 மணிக்கு அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.