Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதியில் பத்மாவதி ... நாகை பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா; காளி நடனத்துடன் கோலாகலம் நாகை பாதாள காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2025
10:04

தஞ்சாவூர், உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்.3ம் தேதி) நடந்தது. இந்நிலையில் , இன்று (ஏப்.23 தேதி) காலை பெரிய கோவிலில், கொடி மரத்துக்கு முன்பாக, சந்திரசேகரர், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.   விழாவின் முதல் நாளான இன்று மாலை படிச்சட்டத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடை பெறுகிறது. தொடர்ந்து 2ம் நாளான நாளை (24ம் தேதி)  பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை  சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடக்கிறது. 3ம் நாளான 25ம் தேதி பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை  மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடக்கிறது. 4ம் நாளான 26ம் தேதி காலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலையில் மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது. சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மே.7ம் தேதி நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான 27ம் தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar