மரகத நடராஜரின் சன்னதி முன்பாக உற்ஸவமூர்த்தியான நடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபராதனைகள் நடக்கிறது. சித்திரை மாத ஓணம், ஆனி மாதத்தில் வரக்கூடிய உத்தரம், மார்கழியில் வரக்கூடிய திருவாதிரை ஆகிய மூன்று நட்சத்திரத்திலும் மற்றும் ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வரக்கூடிய சதுர்தசி திதியிலும் மகா அபிஷேகம் நடக்கிறது. அந்த வகையில் சித்திரை ஓணம் நட்சத்திரத்தை முன்னிட்டு உற்ஸவமூர்த்தியான நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் மாலை 5:00 முதல் இரவு 7:00 மணிக்குள் நிறைவேற்றப்பட்டு உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது. வருடத்தில் 6 பருவங்களாக கணக்கிடப்பட்டு கார்காலம் (ஆடி ஆவணி), குளிர் காலம் (கார்த்திகை, மார்கழி) முன்பனிக்காலம் (தை, மாசி), பின் பனிக்காலம் (பங்குனி, சித்திரை) இளவேனிற் காலம் (பங்குனி, சித்திரை) முதுவேனிற் காலம் (வைகாசி, ஆனி) உள்ளிட்ட மாதங்களாகும். அபூர்வ பச்சை மரகத நடராஜருக்கு மட்டும் வருடத்தில் ஒரு நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று சந்தனம் படி களையப்பட்டு அருணோதய காலத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.