காட்டூர் கருமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2025 01:04
கோவை; கோவை காட்டூர் வி.ஜி. லே அவுட்டில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் 43ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பூச்சாட்டு, அக்கினிக்கம்பம் ஆகியவற்றுடன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 25ம் தேதி திருவிளக்கு வழிபாடு மற்றும் சக்தி கரக வீதி உலாவும், வரும் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண உற்சவம் மிக சிறப்புடன் நடக்க உள்ளது. அதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு, தேர் திருவிழா மற்றும் அன்னதானத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.