Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் மாரியம்மன் கோவில் ... பதட்டமான சூழலில் உத்தப்புரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா பதட்டமான சூழலில் உத்தப்புரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் பாலம் காண, தரிசிக்க சுற்றுலா படகு சவாரி : மே 15ல் இலங்கை அரசு துவக்குகிறது
எழுத்தின் அளவு:
ராமர் பாலம் காண, தரிசிக்க சுற்றுலா படகு சவாரி : மே 15ல் இலங்கை அரசு துவக்குகிறது

பதிவு செய்த நாள்

23 ஏப்
2025
05:04

ராமேஸ்வரம்; தனுஷ்கோடி, இலங்கை இடையே ஸ்ரீராமர் அமைத்த பாலத்தை கண்டு தரிசிக்க மே 15ல் இலங்கை அரசு சுற்றுலா படகு சவாரியை துவக்குகிறது.


ராமாயண வரலாற்றில் ஸ்ரீராமர் தனுஷ்கோடி, இலங்கை இடையே பாலம் அமைத்து சீதையை மீட்டு வந்தார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த இப்பாலத்தை, ஹிந்துக்கள் புனித பாலமாக கருதி இன்றுவரை தனுஷ்கோடியில் அரிச்சல்முனை கடற்கரையில் நின்றபடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். 1914 முதல் 1964 வரை தனுஷ்கோடி, இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில் சுற்றுலா பயணிகள் ராமர் பாலத்தை கண்டு ரசித்தும், தரிசித்தும் சென்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை, இலங்கை தலைமன்னார் இடையே 29 கி.மீ., தூரத்தில் கடல் நீரோட்டம், தட்பவெப்ப மாறுதலுக்கு ஏற்ப ராமர் பாலம் மீது 14 முதல் 18 மணல் தீடையில் காணப்படும். இதில் அரிச்சல்முனையில் இருந்து 5 முதல் 6 தீடையுடன் இந்திய எல்லை முடிந்துவிடும். மீதமுள்ள தீடைகள் இலங்கை வசம் உள்ளது.


சுற்றுலா சவாரி : ராமர் அமைத்த பாலத்தை கண்டு ரசித்து தரிசிக்க நேற்று மன்னார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சுற்றுலா, பாதுகாப்புத்துறை அதிகாரிகள், போலீசார் பங்கேற்றனர். இதில் மே 15 முதல் தலைமன்னாரில் இருந்து சுற்றுலா படகு சவாரி துவக்க முடிவு செய்தனர். இதன் மூலம் உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ராமேஸ்வரம் சங்கர மடத்தில் வழிபாடு செய்வதற்காக, சுவாமிமலையில் தயார் செய்யப்பட்டு, ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி இராபத்து உற்சவத்தில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, காவிரி கரையில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றக்கோரி மலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கத்தில், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் வேடுபறி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar