Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையானுக்கு மின்சார ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் செல்லும் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12ம் நுாற்றாண்டு வீரன் நடுகல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
12ம் நுாற்றாண்டு வீரன் நடுகல் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

24 ஏப்
2025
04:04

தாடிக்கொம்பு; திண்டுக்கல் அழகுபட்டி அருகே 12-ம் நுாற்றாண்டு வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் அழகுபட்டி மாலைகோவில்பட்டி ஓடை அருகே வீரன் ஒருவருடன் பெண் இருந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. வரலாற்று ஆய்வாளர் ந.தி.விஸ்வநாததாஸ், மாணவர் ரத்தினமுரளிதர், ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன்,பெருமாள்சாமி ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கூறியதாவது: வீரனின் வலது கையில் மார்பின் குறுக்கே நீட்டிய நிலையில் வாள் உள்ளது. இரு கையிலும் கங்கணம், தோளில் லாகு வளையம், தலையில் கரண்ட மகுடம் உள்ளது. கழுத்தின் பின்புறம் உத்திரியம் பறப்பது போலும் இடையில் கச்சையும் அதில் இடைகச்சையாணி வேலைப்பாட்டுடன் தொங்குவதும் கால்களில் தண்டையும் உள்ளது. இது வீரன் போரில் இறந்துவிட்டதை குறிக்கிறது.

​பெண்ணின் முகம் வீரனை பார்த்தபடியும் கொண்டை சரிந்தும், காதில் வளையம் மார்பு கச்சையும் அணைத்தப்படி நெஞ்சில் ஆரம், இடது கை மார்பிற்கு கீழ் குடுவை , வலது கையில் வளரி போன்ற ஆயுதம் உள்ளதால் இவ்வீரனின் மனைவியும் யுத்த வீராங்கனையாக இருந்திருக்கலாம். குடுவை உள்ளதால் வீரன் இறந்ததும் அவருடன் உடன்கட்டை ஏறியிருப்பார். இருவரின் தலைக்கும் மேல் சூரியன் சந்திரன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இருவரின் முகமும் மிக தேய்ந்த நிலையில் உள்ளது. இந்நடுகல் சிறிய கல்லடுக்கில் உள்ளது. கல்லடுக்கின் மேல் உள்ள பலகை கல் இரண்டில் தொல் தமிழர் நினைவிடங்களில் உள்ள பல்லாங்குழிகள் போன்ற குழிகள் உள்ளது. இந்நடுகல்லின் காலம் 12-ம் நுாற்றாண்டு ஆகும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடக்கும் தேரோட்ட ... மேலும்
 
temple news
புட்டப்பர்த்தி; புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்ஸவம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 
temple news
சென்னை; கோடம்பாக்கம், புலியூர் பாரத்வாஜேஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி தகடு போர்த்தி, புதிய அதிகார நந்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.47 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar