Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.87 ... காளஹஸ்தி சத்யசாய் கோவிலில் சாய்பாபா ஆராதனை உற்சவம் காளஹஸ்தி சத்யசாய் கோவிலில் சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் மே12 அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் மே12 அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2025
12:04

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 7 காப்பு கட்டுடன் துவங்கும் நிலையில், மே 11 இரவு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க உள்ளார்.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா மே 7 அன்று காலை 9:00 மணிக்கு காப்பு கட்டுடன் துவங்க உள்ளது. அன்று முதல் தினமும் யாகசாலை பூஜைகள் நடந்து, இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஆடி வீதியில் சுற்றி யாகசாலை முன்பு மகா தீபாராதனை நடக்கும். மே 11 காலை 9:00 மணிக்கு பெருமாள், கருப்பண்ண சுவாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடக்க உள்ளது. அன்று இரவு 2:00 மணிக்கு பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, கத்தி, வேல், வளரி, தடி ஏந்தி, நெல்மணி தோரணம் சூடி பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். அப்போது கருப்பண்ண சுவாமியிடம் விடை பெற்று, அதிகாலை 4:00 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வைகையில் இறங்க உள்ளார். மறுநாள் தல்லாகுளத்தில் காலை 9:30 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, பல ஆயிரம் பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்க உள்ளனர். மதியம் ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்து, இரவு வண்டியூர் கோயிலை அடைகிறார். மே 13 இரவு மண்டூக மகரிஷி சாப விமோசனம் நடந்து, இரவு தொடங்கி, விடிய விடிய தசாவதார சேவையில் அருள்பாலிப்பார். தொடர்ந்து கருட வாகனம், ராஜாங்க சேவையில் வைகையில் அருள் பாலிக்கும் பெருமாள், மே 16 காலை மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் நகர்வலம் வருகிறார். அன்று மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்து கண்ணாடி சேவை நடக்கிறது. மே 17 உற்சவ சாந்தி, மறுநாள் பால்குடம் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar