பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
02:04
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, குரும்பபாளையம் தர்மசாஸ்தா கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் விநாயகர், தர்மசாஸ்தா, வீரமாட்சியம்மன், பாலமுருகன் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணிக்கு மங்கள இசை, மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் முதற்கால யாக பூஜை, இரவு, 8:30 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி, ரக் ஷா பந்தனம், நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை, 9:30 மணிக்கு விநாயகர், பாலமுருகன், தர்மசாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகள் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று காலை, 11:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி மதியம், 12:00 மணிக்கு மஹா அன்னதானம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மசாஸ்தா கோவில் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.