விளாச்சேரி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2025 12:04
திருநகர்; மதுரை விளாச்சேரி வேளார் தெருவில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பூமி நீளா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மார்ச் 9ல் கும்பாபிஷேகம் நடந்தது. அன்றுமுதல் நடைபெற்ற மண்டலாபிஷேகம் நேற்று பூர்த்தி செய்யப்பட்டு மண்டல பூஜை நடந்தது. மூலவர்கள் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை நடந்தது. சிவகங்கை சமஸ்தானம் சேவகபெருமாள் கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார் சேவர்கொடியோன், விளாச்சேரரி கருப்பச்சாமி சிவம் மற்றும் குலாலகுல சிவாச்சாரியார்கள் யாக பூஜை நடத்தினர். மூலவர்கள், உற்ஸவர்கள், விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, கருடாழ்வாருக்கு புனித நீர் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.