Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.11.74 ... மதுரை குலுங்க குலுங்க.. கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா மதுரை குலுங்க குலுங்க.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா; பொதுமக்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:
சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா; பொதுமக்கள் வரவேற்பு

பதிவு செய்த நாள்

28 ஏப்
2025
05:04

திருப்புவனம்; திருப்புவனத்தில் இன்று சிறுவர்களின் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. சித்திரை திருவிழா மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் விரும்பும் மிகப்பெரிய திருவிழா. இந்தாண்டு திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 12ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க உள்ளார். அழகர் கோயிலில் இருந்து சீர்பாதம் தாங்கிகள் என அழைக்கப்படும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அழகரை சுமந்து வருவார்கள். இதற்காக விரதம் இருந்து அழகரை தூக்கி வருவது வழக்கம், இதில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலும் வசிக்கின்றனர். செல்போன், இண்டெர் நெட், இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்டவற்றால் இளையதலைமுறையினர் வசம் திருவிழாக்கள் பற்றிய எதிர்பார்ப்புகள், ஆர்வங்கள் குறைந்து விட்டாலும் சித்திரை திருவிழா மீதான ஆர்வம் மட்டும் குறைவதே இல்லை. ஒவ்வொரு வருடமும் அழகரை காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு சாட்சியாகும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இணைந்து சித்திரை திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். மதுரை சித்திரை திருவிழா போன்றே கால அட்டவணை போட்டு ஒருவாரமாக கொண்டாடி வந்த சிறுவர்கள் இன்று அழகரை பூப்பல்லக்கில் வைத்து திருப்புவனம் நகர வீதிகளை வலம் வந்தனர். கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி சிறுவர்கள் வலம் வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது. இதற்காக சிறுவர்கள் பலரும் தங்களது சேமிப்பில் இருந்து அலங்கார பொருட்கள் வாங்கி பூப்பல்லக்கு தயார் செய்துள்ளனர். திருப்புவனம் நகர வீதிகளில் அழகரை தூக்கி கொண்டு வலம் வந்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. 


சிறுவன் குமார் கூறுகையில் : எங்கள் பரம்பரையே சீர்பாதம் தாங்கிகள், அழகரை சுமந்து வலம் வருவது வழக்கம், இந்தாண்டு விடுமுறை என்பதால் அழகரை பூப்பல்லக்கில் வைத்து வலம் வந்தோம், இதற்காக பத்து நாட்கள் திருவிழா நடத்தினோம், என்றார். சிறுவர்கள் என்றாலும் முறையாக சுவாமியை அலங்கரித்து வலம் வந்தது பாராட்டுக்குறியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar