ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு ; ஆளும்பல்லக்கில் நம்பெருமாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2025 11:04
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விருப்பன்திருநாள் எனப்படும் சித்திரைதேர் உற்சவம் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் பதினோராம் திருநாள் இரவு ஆளும்பல்லக்கில் நம்பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.