எல்லம்மன் கோவிலில் தெப்ப திருவிழா; அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2025 11:04
வாலாஜாபாத்; வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுாரில், ஸ்ரீதேவி எல்லம்மன் கோவில் உள்ளது. இந்த கிராம கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி, இந்தஆண்டுக்கான, 46ம் ஆண்டு விழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம், அக்கோவில் குளத்தில் தெப்ப உத்சவம் விழா விமரிசையாக நடந்தது.இரவு 7:30 மணிக்கு,தெப்பத்தில், மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி கோவில் குளத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். அப்போது, பக்தர்கள் முதுகில் அலகு குத்தி பறவை காவடியில் அந்தரத்தில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில், நத்தாநல்லுார் சுற்றுவட்டாரப் பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.