Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பன்னீர்மடை பாலமுருகன் கோயிலில் ... திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோத்ஸவம் துவக்கம்; மே10 ல் தேரோட்டம் திருக்கோஷ்டியூரில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டை நாதர் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
சீர்காழி சட்டை நாதர் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

01 மே
2025
04:05

மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர்  கோவிலில் நடந்த சித்திரை பெருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தேவார பாடல் பெற்ற மலைக்கோவிலான இங்கு சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டை நாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளியுள்ளனர். மேலும் அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளதால் காசிக்கு இணையான பைரவ சேத்திரமாக போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தர் அவதார ஸ்தலம். இக்கோவிலில் சுவாமி, அம்பாள், சட்டை நாதர் மற்றும் பைரவர்களை வழிபடுவோர் பாவ சாப தோஷங்கள் நீங்கி, சிறந்த ஞானத்தையும், சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய கோவிலின் சித்திரை பெருவிழா இன்று பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி 14 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரை பெருவிழா கொடியேற்றம் இன்று  நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று காலை மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய மிதுன லக்னத்தில் கோவில் கொடிமரம் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள சிவாச்சாரியார்கள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க தருமபுரம் ஆதீன கட்டளை  சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் ரிஷப கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில் தலைமையிலானோர் செய்திருந்தனர். சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக நாளை பகல் 12 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் புகழ்பெற்ற திருமுலைப்பால் விழா, 5ம் தேதி சகோபரம், 6ம் தேதி திருக்கல்யாணம் 8ம் தேதி திருத்தேர் உற்சவம், 13ம் தேதி தெப்போற்சவம் 23ம் தேதி முத்து சட்டை நாதர் உற்சவம்  நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
சென்னை; சங்கரா கல்வி, மருத்துவ குழுமங்களில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியவர்களுக்கு, காஞ்சி ... மேலும்
 
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் பஜனை குழு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த பெருமை ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோிலான  திரௌபதி சமேத தர்மராஜ சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar