பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2025 05:05
பரமக்குடி; பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் சுவாமி, அம்பாள் குண்டோதரன் மற்றும் சிம்ம வாகனத்தில் வலம் வந்தனர். பரமக்குடி விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப்.,30ல் கொடியேற்றப்பட்டது. தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வரும் நிலையில் மே 7ல் விசாலாட்சி அம்பாள் கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். மே 8 திருக்கல்யாணமும், மறுநாள் தேரோட்டமும் நடக்க உள்ளது. நேற்று முன்தினம் மாலை குண்டோதரன் வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுனும், அம்பாள் சிம்ம வாகனத்தில் வலம் வந்தனர். முன்னதாக மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் முன் சென்றனர்.