பதிவு செய்த நாள்
05
மே
2025
10:05
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயில்களான சரவணப் பொய்கை ஆறுமுக நயினார் கோயில், மலைக்கு பின்புறமுள்ள பால் சுனைகண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில்களுக்கு நேற்று பாலாலயம் நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக உபகோயிகளான சொக்கநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், பாம்பலம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில்களில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வம், பொம்மதேவன், ராமையா செலவில் ஏப். 16ல் கும்பிஷேகம் நடந்தது. இரண்டாம் கட்டமாக சரவண பொய்கை ஆறுமுக நயினார் கோயில், மலைக்கு பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழுவினர் முடிவு செய்தனர். அதற்கான பாலாலயம் பூஜை நேற்று நடந்தது. மூலவர்களின் சக்தி புனித நீர் அடங்கிய கும்பங்களில் கலை இறக்கம் செய்யப்பட்டு ஆறுமுக நயினார் கோயிலில் வைத்து பாலாலய பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ரமேஷ், சொக்கு சுப்பிரமணியம் பூஜை செய்தனர். அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், துணை கமிஷனர் சூரிய நாராயணன் கலந்து கொண்டனர்.