ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் அஷ்டமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2025 12:05
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு அஷ்டமி தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ராதா, ருக்மணி, கிருஷ்ணர் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நடந்தது. நகரின் தேரோடும் வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கிருஷ்ணர் பஜனை பாடல்களைப் பாடி, தரிசனம் செய்தனர்.