பதிவு செய்த நாள்
06
மே
2025
03:05
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா கடந்த 5 ம் தேதி முதல் தேர் முகூர்த்தகால் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி, இன்று காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக யாக பூஜை நடைப்பெற்றது. தொடர்ந்து , உத்தமலிங்கேஸ்வரர் மற்றும் கோவர்த்தனாம்பிகைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, உத்தம லிங்கேஸ்வரர், கோவர்த்தனாம்பிகையுடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதிஉலா நடைபெற்றது. தேர் வீதியில் சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார். நாளை 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை தினசரி இரவு 8:00 மணிக்கு மண்டபகட்டளை, 10 ம் தேதி இரவு உத்தமலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல், 11 ம் தேதி இரவு திருகல்யாண வைபவம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது. 12ம் தேதி மாலை 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 13ம் தேதி இரவு 8:00 மணிக்கு பதிவேட்டை, குதிரை வாகன நிகழ்ச்சி, 14ம் தேதி காலை 9:00 மணிக்கு நடராஜர் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சபரீஷ்குமார், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், ஆகியோர் செய்து வருகின்றனர்.