திருவாடானை; சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு 11:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. வல்மீகநாதர், பிரியாவிடையுடன், பாகம்பிரியாள் அம்மன் திருமண அலங்காரத்தில் காட்சியளித்தனர். மணிகண்டன்குருக்கள், வல்மீகநாதகுருக்கள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. தேவஸ்தான செயல் அலுவலர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் திருவெற்றியூர் கிராமத்தினர் கலந்து கொண்டனர். மே 9 ல் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும். விழா நாட்களில் வெள்ளி ரிஷபம், நந்தி சிம்மம், வெட்டுங்குதிரை, காமதேனு போன்ற வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.