Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியூர்பட்டி பூமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையின் பட்டத்தரசியாக முடிசூடிய மீனாட்சி அம்மன்; நாளை மீனாட்சி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
மதுரையின் பட்டத்தரசியாக முடிசூடிய மீனாட்சி அம்மன்; நாளை மீனாட்சி திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

07 மே
2025
10:05

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, எட்டாம் நாள் திருவிழாவாக அன்னை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மீனாட்சி அம்மனுக்கு, ராயர் கிரீடம் எனப்படும் வைரக்கிரீடம் மற்றும் செங்கோலும் சூட்டப்பட்டு, பட்டாபிஷேகம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.ஒன்பதாம் நாளான இன்று திக்கு விஜயம் நடைபெறுகிறது.

நாளை  மீனாட்சி திருக்கல்யாணம்; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவில் நாளை(மே 8) காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி கோயில் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்றிரவு 11:00 மணி முதல் மதுரை ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்லவோ, ‘பார்க்கிங்’ செய்யவோ அனுமதி இல்லை. அனுமதி சீட்டுடன் வரும் வாகனங்கள் நாளை காலை 6:00 மணி முதல் அனுமதிக்கப்படும்.

* மஞ்சள் நிற அனுமதி சீட்டு உள்ளவர்களின் வாகனங்கள் மேல ஆவணி மூல வீதியில் நிறுத்த வேண்டும். இதற்காக வடக்கு – மேலமாசிவீதி சந்திப்பு, வடுககாவல் கூடத்தெரு, தானப்ப முதலி தெரு வழியாக வரவேண்டும். திருக்கல்யாணம் முடிந்ததும் பண்டு ஆபீஸ், ஜான்சிராணி பூங்கா, நேதாஜி ரோடு வழியாக வெளியேற வேண்டும்.

* ரோஸ் நிற அனுமதி சீட்டு உள்ளவர்கள் வடக்கு ஆவணி மூல வீதியில் நிறுத்த மேற்கண்ட பாதை வழியாக வரவேண்டும். திருக்கல்யாணத்திற்கு பிறகு தளவாய் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக செல்ல வேண்டும்.

* நீலநிற அனுமதி சீட்டு உள்ளவர்கள் தெற்காவணி மூல வீதியில் நிறுத்த கட்டபொம்மன் சிலை, நேதாஜி ரோடு, ஜான்சிராணி பூங்கா வழியாக வரவேண்டும். அதேபோல் விளக்குத்துாண், தெற்குமாசிவீதி, மேலமாசிவீதி, நேதாஜி ரோடு வழியாகவும் வரலாம். திருக்கல்யாணத்திற்கு பிறகு வெங்கல கடைத்தெரு, விளக்குத்துாண் வழியாக வெளியேற வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் அதிகாலை 5:00 மணி முதல் கிழக்கு, தெற்கு, வடக்குமாசிவீதியில் நிறுத்த வேண்டும். கீழஆவணி மூலவீதியில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது.

தேரோட்டம்; மே 9 தேரோட்டத்தை முன்னிட்டு நாளை இரவு 10:00 மணி முதல் மாசி வீதிகளில் எந்த வாகனமும் நிறுத்தக்கூடாது. தேரோட்டத்தை காண வருவோர் தங்கள் வாகனங்களை மாரட்வீதிகளில் நிறுத்த வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் முக்கிய திருவிழாக்களில் சித்திரை பெருவிழாவும் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில் கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ராமநவமி உற்சவ வைபவம் நடைபெற்றது.காரமடை அரங்கநாதர் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் காலபைரவர் கோவிலில் ... மேலும்
 
temple news
செந்துறை; நத்தம் செந்துறை அருகே பெரியூர்பட்டி பூமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் கடந்த 27-ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar