Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்காடு காமாட்சி அம்மன் கோவில் ... கோவை முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம் கோவை முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெதர்லாந்தில் ஏலம் விட இருந்த கண்ணப்ப நாயனார் சிலை மீட்பு
எழுத்தின் அளவு:
நெதர்லாந்தில் ஏலம் விட இருந்த கண்ணப்ப நாயனார் சிலை மீட்பு

பதிவு செய்த நாள்

07 மே
2025
11:05

சென்னை; நெதர்லாந்து நாட்டில் ஏலம் விட இருந்த, கண்ணப்ப நாயனார் உலோகச் சிலையை, தமிழக போலீசார் மீட்டுள்ளனர்.


நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகழூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில், தொன்மை வாய்ந்த கண்ணப்ப நாயனார் உலோகச்சிலை இருந்தது. இச்சிலையை, 15 ஆண்டுகளுக்கு முன், மர்ம நபர்கள் திருடி, வெளிநாட்டிற்கு கடத்திச் சென்று விட்டனர். இந்த சிலை திருட்டு தொடர்பாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து நாட்டின் நுண்கலை கண்காட்சியில், தமிழகத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட கண்ணப்ப நாயனார் உலோகச் சிலை ஏலம் விட இருப்பதை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர். கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் தலைமையில், ஐ.ஜி., பிரவேஷ் குமார் ஆகியோர், நெதர்லாந்து நாட்டு போலீஸ் மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு, கண்ணப்ப நாயனார் சிலை தமிழக கோவிலுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை அனுப்பினார். அதன்படி, ஏலம் விடும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது; சிலையும் மீட்கப்பட்டது. தற்போது, நெதர்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் பராமரிப்பில் சிலை உள்ளது. இச்சிலையை தமிழகம் எடுத்து வர, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். சிலையை மீட்க காரணமாக இருந்த பிரவேஷ்குமார், தற்போது சென்னை மாநகர போலீசில், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். சிலை மீட்பு பணியில் ஈடுபட்ட, கூடுதல் டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar