வடமதுரை; வடமதுரை மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. சன்னதி வளாகத்தில் நேற்று காலை விநாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் யாக பூஜைகளை தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி வடமதுரையின் நான்கு ரத வீதிகள் வழியே வலம் வந்தார்.