பதிவு செய்த நாள்
09
மே
2025
08:05
சென்னை; கலியுகத்தின் ஆரம்பத்தில், மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இருந்து, ஸ்ரீனிவாசராக பூமிக்கு வந்தார். நாராயண வனத்தை ஆண்டு வந்த வனத்தின் ராஜா, தன் மகள் பத்மாவதியை, ஸ்ரீனிவாசருக்கு மணமுடித்தார் என, வெங்கடாச்சல மகாத்மிய கிரந்தம் கூறுகிறது. இந்த திருமண விழாவை குறிக்கும் வகையில், திருமலையில் ஆண்டுதோறும் பத்மாவதி தாயார் – ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு, மூன்று நாள் பரிணயோத்சவம் எனும் கல்யாண உத்சவம் கொண்டாடப்படும். அந்த வகையில், கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை, அங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதேபோல, விழாவின் நிறைவு நாளான நேற்று, தி.நகர்., பத்மாவதி தாயார் கோவிலில் பரிணயோத்சவம் கொண்டாடப்பட்டது.