Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் பெரிய தேர்; ... விழுப்புரம் வைகுண்டவாசர் கருட சேவையில் அருள்பாலிப்பு விழுப்புரம் வைகுண்டவாசர் கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 மே
2025
08:05

திருவள்ளூர்; திருவள்ளூர் வீரராகவர் கோவில் சித்திரை பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளான நேற்று நடந்த தேரோட்டத்தில், பக்தர்கள், ‘வீரராகவா கோவிந்தா’ சரணத்துடன் தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை பிரம்மோத்சவம் நடைபெறுவது வழக்கம். தை பிரம்மோத்சவத்திற்கு பின், சைத்ர பிரம்மோற்சவம் எனும் சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலை உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை 4.20 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருத்தேருக்கு எழுந்தருளினார். பின், காலை 7.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடு நடந்தது. பொக்லைன் இயந்திரம் வாயிலாக தேர் இழுக்கப்பட்டு, குளக்கரை தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக, மீண்டும் நிலையை அடைந்தது.

இதில், ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் குவிந்து, ‘வீரராகவா கோவிந்தா’ சரணம் முழுங்க பெருமாளை வழிபட்டனர். தேரில் இரவு வரை அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், இரவு திருமஞ்சனம் நடந்த பின், கோவிலுக்குள் பெருமாள் திரும்பினார். பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான இன்று, மாலை திருப்பாதம்சாடி திருமஞ்சனம், இரவு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறும். நாளை, தீர்த்தவாரி, இரவு விஜயகோடி விமான சேவை நடைபெறும். நாளை மறுநாள், கண்ணாடி பல்லக்கு மற்றும் பிரம்சோத்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar