Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென் திருப்பதியில் கருட வாகனத்தில் ... திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

09 மே
2025
02:05

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி  நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து தினம் தோறும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். நேற்று ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று தேரோட்ட விழாவிற்காக அதிகாலை சோமநாதர் பிரியாவிடையுடன் பெரிய தேருக்கும், ஆனந்தவல்லி அம்மன் பெரிய தேருக்கு பின்னால் உள்ள சிறிய தேரிலும் எழுந்தருளினர். தேர்களுக்கு முன்பாக சிறிய தேரில் முருகன் வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளினார். காலை 10:20 மணிக்கு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து நான்கு ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர. தேர்கள் நிலையை அடைந்தவுடன் ஏராளமானோர் நேர்த்திக் கடனாக தேங்காய்களை உடைத்தனர். மேலும் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த காய்கறிகளையும் தேர்கள் மீது வீசினர். பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனைகளும் பூஜைகளும் நடைபெற்றது. தேர்வலம் வரும்போது நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் போது ஏராளமானோர் இலவசமாக மோர், குளிர்பானங்கள், மற்றும் பழங்களை வழங்கினர்.தேரோட்ட விழாவில் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்ட விழாவிற்கான பாதுகாப்பு பணியில் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar