Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் ... வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள்  வடம் பிடித்து இழுத்தனர் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாமியம்மன் கோயில் தேரோட்டம் துவங்கியது: ஹரஹர மகாதேவா கோஷமிட்டு இழுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சிவகாமியம்மன் கோயில் தேரோட்டம் துவங்கியது:  ஹரஹர மகாதேவா  கோஷமிட்டு இழுத்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

10 மே
2025
01:05

சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலை துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

சின்னமனூரில் பழமையும் பிரசித்தி பெற்றதுமான சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவுடன் நடத்தப்படும். சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்ததால் 2022 க்கு பின் தேரோட்டம் நடக்கவில்லை. பின் திருப்பணிகள் முடிந்து கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

மே 1 ல் கொடியேற்றம் நடைபெற்றது. தினமும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெற்று வருகிறது . நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று காலை 9:30 மணியளவில் சுவாமியும், அம்பாளும் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலையில் வடக்கு ரத வீதியில் நிலையில் இருந்து தேரோட்டம் துவங்கியது . முன்னதாக தேரில் எழுந்தருளியுள்ள சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், நகராட்சி தலைவர் அய்யம்மாள், மாவட்ட தி.மு.க. முன்னாள் இளைஞரணி நிர்வாகி பஞ்சாப் குமரன், செயல் அலுவலர் நதியா ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். சிவ வாத்தியங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர மகாதேவா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

வடக்கு ரத வீதி, கிழக்கு ரதவீதியின் முடிவில் நிலை நிறுத்தப்பட்டது.

இன்று மாலை 5:00 மணிக்கு மீண்டும் தேர் இழுக்கப்பட்டு தெற்கு ரத வீதி, மெயின் ரோடு வழியாக தேர் நிலை நிறுத்தப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar