Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி ... ஆலங்குடி, திட்டையில் குருப்பெயர்ச்சி விழா; குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆலங்குடி, திட்டையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தவாடி குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி விழா விமரிசை
எழுத்தின் அளவு:
கோவிந்தவாடி குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி விழா விமரிசை

பதிவு செய்த நாள்

12 மே
2025
11:05

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், குரு பரிகார தலம் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. ஆதி குருவாக விளங்கும் மூலவர் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நேற்று மதியம், ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ச்சியானார். இந்த குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, தட்சிணாமூர்த்தி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். புதுப்பாக்கம் கிராமத்தில் காமாட்சி அம்பாள் சமேத கண்டீஸ்வரர் கோவில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, நேற்று பிற்பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. l காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் கூழமந்தல் ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், திருக்கல்யாண திருக்கோலத்துடன் அருள்பாலிக்கும் தாரை சமேத குரு பகவான் சன்னிதியில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.

இதில், நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதி தேவதைகள், வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், சனீஸ்வரர், ராகு, கேது உள்ளிட்ட சுவாமிகளுக்கு விசேஷ அபிஷேகம், தொடர்ந்து காலை 10:00 மணிக்கு கலச ஸ்தாபனம், 27 நட்சத்திர பரிகார சாந்தி ஹோமம், மதியம் 12:00 மணிக்கு குரு பகவானுக்கு விசேஷ கலச அபிஷேக அலங்காரம் நடந்தன. மதியம் 12:50 மணிக்கு குரு பெயர்ச்சி மஹா தீப ஆராதனை, சுவாமி பிரசாதம் வினியோகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். l காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், முடங்கு வீதியில் உள்ள காயோகணீஸ்வரர் குரு கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். இன்று பிற்பகல் 12:00 மணிக்கு குரு பகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், வரும் 15ம் தேதி ஊஞ்சல் உத்சவமும் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழா முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் இறங்கிய ... மேலும்
 
temple news
சிவகங்கை; மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் கோவில் வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா மே 8ம் தேதி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ௨௦ லட்சம் பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில் சித்திரை சப்தஸ்தான திருவிழா ஐயாறப்பர் கண்ணாடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar