Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குதிரை வாகனத்தில் கும்ப நதியில் ... ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்கமன்னார் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர் வேடத்தில் மருதாநதியில் இறங்கிய சித்தரேவு வரதராஜபெருமாள்
எழுத்தின் அளவு:
அழகர் வேடத்தில் மருதாநதியில் இறங்கிய சித்தரேவு வரதராஜபெருமாள்

பதிவு செய்த நாள்

12 மே
2025
01:05

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் அமைந்துள்ள வரதராஜபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, அழகர் வேடமணிந்த வரதராஜபெருமாள் பச்சை பட்டு உடுத்தி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி அய்யம்பாளைம் மருதாநதி ஆற்றில் இறங்கினார். 


இந்த கண்கொள்ளாக் காட்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். "கோவிந்தா", "கோவிந்தா" என்ற பக்தர்களின் விண்ணை முட்டும் கோஷம் மருதாநதி கரையெங்கும் எதிரொலித்தது. முன்னதாக, வரதராஜபெருமாள் சித்தரேவு கிராமத்தில் இருந்து நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி வழியாக குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வந்தார். பெருமாள் வரும் வழியெங்கும் பக்தர்கள் தீவட்டி ஏந்தி ஆடி வந்தனர். காளை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது. மேலும், பக்தர்கள் சர்க்கரை குடம் ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அழகர் வேடத்தில் பச்சை பட்டுடுத்தி மருதாநதி ஆற்றில் வரதராஜபெருமாள் இறங்கியபோது, பக்தர்கள் "கோவிந்தா", "நாராயணா" என சரண கோஷங்கள் எழுப்பியவாறு பெருமாள் மீது புனித நீர் தெளித்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் சேசன் மற்றும் விழாக்குழுவைச் சேர்ந்த ரமேஷ்பாபு, முருகன், மூர்த்தி, புகழேந்தி, சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை: கோவை ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீசத்ய சாயி 100வது பிறந்த நாள் விழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வேட்டைக்காரன் சுவாமி திருவிழாவில்,50 கிடாய்கள் வெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar