Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குதிரை வாகனத்தில் கும்ப நதியில் ... ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்கமன்னார் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர் வேடத்தில் மருதாநதியில் இறங்கிய சித்தரேவு வரதராஜபெருமாள்
எழுத்தின் அளவு:
அழகர் வேடத்தில் மருதாநதியில் இறங்கிய சித்தரேவு வரதராஜபெருமாள்

பதிவு செய்த நாள்

12 மே
2025
01:05

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் அமைந்துள்ள வரதராஜபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, அழகர் வேடமணிந்த வரதராஜபெருமாள் பச்சை பட்டு உடுத்தி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி அய்யம்பாளைம் மருதாநதி ஆற்றில் இறங்கினார். 

இந்த கண்கொள்ளாக் காட்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். "கோவிந்தா", "கோவிந்தா" என்ற பக்தர்களின் விண்ணை முட்டும் கோஷம் மருதாநதி கரையெங்கும் எதிரொலித்தது. முன்னதாக, வரதராஜபெருமாள் சித்தரேவு கிராமத்தில் இருந்து நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி வழியாக குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வந்தார். பெருமாள் வரும் வழியெங்கும் பக்தர்கள் தீவட்டி ஏந்தி ஆடி வந்தனர். காளை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது. மேலும், பக்தர்கள் சர்க்கரை குடம் ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அழகர் வேடத்தில் பச்சை பட்டுடுத்தி மருதாநதி ஆற்றில் வரதராஜபெருமாள் இறங்கியபோது, பக்தர்கள் "கோவிந்தா", "நாராயணா" என சரண கோஷங்கள் எழுப்பியவாறு பெருமாள் மீது புனித நீர் தெளித்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் சேசன் மற்றும் விழாக்குழுவைச் சேர்ந்த ரமேஷ்பாபு, முருகன், மூர்த்தி, புகழேந்தி, சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar