திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தேர் செய்யும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2025 03:05
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தேர் திருவிழா முன்னிட்டு தேர்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காரைக்கால் திருநள்ளாறு பிரசித்தி பெற்ற தர்பார்னேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள் பழித்து வருகிறார்.இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோஷா விழா மிக விமர்சையாக நடைபெறும் விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதை தொடர்ந்து விநாயகர் உற்சவம் சுப்பிரமணிய உற்சவம் அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.வரும் 6ம் தேதி ஐந்து தேரோட்டம் நடைபெறுகிறது.7ம் தேதி தங்க காக வாகனம் வீதியுலா.8ம் தேதி தெப்பத் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனால் தேர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.