பதிவு செய்த நாள்
22
மே
2025
05:05
செஞ்சி; கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு அம்மச்சாரம்மன், செல்வவிநாயகர்,ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 26ஆம் ஆண்டு பிரம்மோற்சவம், 16ஆம் ஆண்டு திருத்தேர் உற்சவம் கடந்த 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் 20ம் தேதி பால்குடங்கள் ஊர்வலமும். 21ம் தேதி மாலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், வழக்கறிஞர் விஜய்மகேஷ், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை 23ம் தேதி மாலை திருவிளக்கு பூஜையும், 24ம் தேதி பூ பல்லக்கும், 25ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.