வைகாசி வெள்ளி, ஏகாதசி விரதம்; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2025 10:05
கோவை; வைகாசி ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.இதில் உற் சவர் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் துளசி மாலை மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* வைகாசி இரண்டாவது வெள்ளிகிழமையை முன்னிட்டு கோவை என்.எச். ரோடு -டவுன்ஹால் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.