நெய்க்காரப்பட்டி; பழநி, நெய்க்காரப்பட்டி கே.வேலுார் சுயம்பு மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு பூக்குழி ,கண் திறத்தல் நிகழ்ச்சி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சண்முக நதியில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். நேற்று (ஜூன் 11) காலை 6:00 மணிக்கு ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சுற்று கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் , முடி இறக்குதல், பூச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். வானவேடிக்கை நடைபெற்றது. நாளை ( ஜூன் 13) குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது.