செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 58 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கான உண்டியல் வசூல் எண்ணும் பணி நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், துணை ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், சேவார்த்திகள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.58 லட்சத்து 98 ஆயிரத்து 294 ரூபாய் ரொக்கம், 133 கிராம் தங்கம், 2 கிலோ 681 கிராம் வெள்ளி நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறங்காவலர்கள் சுரேஷ், ஏழுமலை,பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், ஆய்வாளர் சங்கீதா, கண்காணிப்பாளர் பாக்கியலட்சுமி, மேலாளர் மணி, சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.