வைகாசி கடைசி வெள்ளி; விளையாட்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2025 11:06
கோவை; கோவை காட்டூர் செல்லப்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.