நத்தம்; நத்தம் அருகே ஒத்தினிப்பட்டி கரையம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு கரையம்மன் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பூஜைகளும் நடந்தது.பின்னர் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, அலகு வேல் குத்துதல், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து நேற்று மாலை அம்மன் பக்தர்கள் புடைசூழ பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒத்தினிப்பட்டி, லெட்சுமணபுரம், பஞ்சயம்பட்டி, ஓ.புதூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.