பதிவு செய்த நாள்
13
ஜூன்
2025
03:06
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயக சுவாமி தேவஸ்தானத்தில் நேற்று (12ம் தேதி) காணிக்கை கணக்கிடும் பணி நடைபெற்றது.
வரசித்தி விநாயக சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் தங்கள் காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். அவ்வாறு கடந்த 26 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கோயில் அதிகாரிகள் முன்னிலையில் கணக்கிடும் பணி நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் ரொக்க பணமாக ரூ. 2,18,93,556 மற்றம் தங்கம்29 கிராம், வெள்ளி 2 கிலோ 350 கிராம் இருந்தது. நித்ய அன்னதானம் உண்டியல் மூலம்ரூ. 42,877, யு.எஸ்.ஏ 609. டாலர்கள், சிங்கப்பூர் - 20 டாலர்கள், மலேசியா - 41 ரிங்கிட்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 25.தீரம்கள், கனடா - 60 டாலர்கள், ஆஸ்திரேலியா 325 டாலர்கள், இங்கிலாந்து 25. பவுண்டுகள் இருந்ததாக கோயில் செயல் அலுவலர் பென்சல கிஷோர் தெரிவித்தார். உண்டியல் பணம் கணக்கிடுகையில் கோயில் துணை செயல் அதிகாரிகள் எஸ்.வி.கிருஷ்ணா ரெட்டி, ரவீந்திரபாபு, ஹரிமாதவ ரெட்டி, தனஞ்சய, மேற்பார்வையாளர்கள் - கோதண்டபாணி, ஹூண்டி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் நாயுடு, கோவில் பணியாளர்கள், யூனியன் வங்கி காணிப்பாக்கம் கிளை ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.