சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.92.45 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2025 11:06
கும்மிடிப்பூண்டி; திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்வந்து முருகனை தரிசனம் செய்வர். கடந்த ஏப்ரல் 3ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதன்பின் நேற்று, கோவில் வெளி பிரகாரத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலைய துறையின் வேலுார் உதவி ஆணையர் சங்கர் உள்ளிட்டோர் மேற்பார்வையில், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 92 லட்சத்து 45 ஆயிரத்து 812 ரூபாய், 59 கிராம் தங்கம், 8 கிலோ 345 கிராம் வெள்ளி பொருட்கள் கணக்கிடப்பட்டு வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.